வெளிநாடுகளில் கறுப்புப் பணம்
பதுக்கியுள்ளவர்களில் 8 பேரின் பெயர்களை மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்ற
பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் டாபர் குழுமத்தின் பிரதீப்
பர்மன், கோவாவை மையமாகக் கொண்ட சுரங்கத்
தொழிலதிபர் ராதா எஸ். டிம்ப்ளோ, பங்கு வர்த்தகர்
பங்கஜ் சிமன்லால் லோத்யா மற்றும் இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் 5பேர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு
பணத்தை பதுக்கி உள்ளவர்கள் பற்றிய தகவல்களை தர அந்நாட்டு அரசு ஒப்புதல்
தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
No comments:
Post a Comment