newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Tuesday 21 October 2014

ஆசிரியர்களுக்கு கணித பயிற்சி

அரியலூர்:22`10`2014
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டார வளமையத்திற்கு உட்பட்ட 83 பள்ளிகளில் இருந்து 93 தொடக்கநிலை ஆசிரி யர்களுக்கு கணித அடிப்படைத்திறனை வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கணித உபகரணப் பெட்டி யைப் பயன்படுத்தி கணித அடிப்படை செயல்பாடு களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதத்தை எளிமை யான முறையில் கற்பித்தல் திறன் பயிற்சி 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப்பயிற்சியை வட்டார வள மைய மேற்பார் வையாளர்(பொறுப்பு) குறிஞ்சிதேவி தொடங்கி வைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இளங்கோவன், இராசாத்தி, முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் அனைவ ருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர் கணேசன் பார்வையிட்டு பேசினார். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக கலாமாலினி, குணசேகரன், சுப்பிரமணியன், மதியழகன், ரமேஷ், ஆகியோர் பயிற்சி அளித் தனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர் பயிற்றுநர்களான செல்வகுமார், இளையராஜா, சத்தியபாமா, முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment