ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்திய ராணுவம் தரப்பில் உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
பூஞ்ச் மாவட்டத்தின் ஹமிர்பூரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், நேற்றிரவு 9 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தியத் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதால், ஒரு மணி நேரம் வரை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்தியத் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 3 நாட்களாக ஹமிர்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment