அரியலூர்:26.10.2014
அரியலூரில், பஸ் நிலையம் அருகில் உள்ள செட்டி ஏரியின் மேம்பாட்டு பணிகள் குறித்து
கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செட்டி ஏரி
அரியலூர் மாவட்டம்,
அரியலூரில் பஸ் நிலையம் அருகில் உள்ள செட்டி ஏரி ஏற்கனவே தமிழக
அரசின் 2012-13-ம் ஆண்டு தன் னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.96
லட்சம் மதி¢ப்பில் சீரமைப்பு மற்றும் அழகு படுத்தும் பணிகள் மேற்
கொள்ளப்பட்டுள்ளது.
அரியலூர்
நகராட்சிக்குட் பட்ட இந்த ஏரி 7.45 ஏக்கர் பரப்பளவில்
உள்ளது. இங்குள்ள சுற்றுச்சுவர், குழந்தைகள் பூங்கா, நடை பாதை ஆகியவை சீரமைக் கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த ஏரியில்
கரையோரம் தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்தும், போதிய மின்
விளக்கு வசதிகள் செய் வது குறித்தும், கரையோரங்களில் உள்ள
செடிகள் நிறைந்த புதர்களை அகற்றி தூய்மை படுத்துவது குறித்தும் மற்றும் ஏரியில்
உள்ள சிறப்பு வாய்ந்த பூங்கா மற்றும் நடைபாதை களை மேலும் மேம்படுத்துவது
குறித்தும் கலெக்டர் சரவண வேல்ராஜ் அலுவலர் களுடன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு
செய்தார்.
இந்த ஆய்வின்போது,
மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன், மாவட்ட
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயக மூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தில்குமரன், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர்
வைத்தியநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment