newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 2 November 2014

தமிழ்நாட்டில் 100 இலங்கை நாட்டினர் மீது ஹெராயின் கடத்தல் வழக்கு

சென்னை, அக். 31:



இலங்கையில் போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் தமிழ் நாட்டில் போதைப் பொருள் கடத்திய இலங்கையை சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஹெராயின்கடத்தியதாக தென் மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. தற்போது இவர்கள் மீதான வழக்கு தமிழ்நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெற்று வருகிறது.

இவர்கள் 250 கிராமுக்கு மேல் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்து 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

தொடர்ந்து போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இலங்கைவாசிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போதை பொருள் கடத்திய போது பிடிபட்டவர்கள். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது கிழக்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து போதை பொருள் கடத்தும் தொழிலில் மந்தமான சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும், சென்னையில் பூமியில் புதைத்து மறைத்து வைத்திருந்த 15 கிலோ ஹெராயினை டெல்லி சிறப்பு போலீசார் தோண்டி எடுத்தனர். இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுவாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் போதை பொருள் கடத்தி வரப்படுகிறது. அது தமிழ்நாடு வழியாக ரெயில் அல்லது ரோடு மார்க்கமாக கொண்டு வரப்படுகிறது.
பின்னர் அவை சில ஏஜென்டுகள் மூலம் இலங்கைக்கு கடல் மூலமாகவும், மற்ற மேலை நாடுகளுக்கும் பலவித போக்குவரத்து மூலமாகவும் அனுப்பப்படுகிறது.



No comments:

Post a Comment