அரியலூர்:21.10.2014
மீன்சுருட்டி அருகே வீட்டின் மீது மரம் விழுந்து கணவன்- மனைவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டி அருகே உள்ள ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35) நெசவு தொழி லாளி. இவரும், இவரது மனைவி கல்பனா (28) . மகன் கோகுல் (5). பாஸ்கரின் தங்கை மகள் மோனிஷா (7) ஆகிய 4 பேரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரம் வீட்டின் மீது விழுந்தது. இந்த நிலையில் வீட்டில் படுத்து இருந்த 4 பேர் மீதும் ஓடுகள் நொறுங்கி விழுந்தது. இதில் அவர்கள் லேசான காயம் அடைந்த னர். இதையடுத்து 4 பேரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் வீட்டின் மீது விழுந்த மரம் கயிறு கட்டி அகற்றப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ரெட்டி பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சென்று விசாரணை மேற் கொண்டனர்.
No comments:
Post a Comment