newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 9 November 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன் அபுபக்கர் ஒழிந்தான்.....?

பாக்தாத்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்த மாகாணங்களுக்கு, அவர்களாக நியமித்த கவர்னர்கள் மற்றும் அந்த கொடூர பயங்கரவாதிகளின் முக்கிய தலைவர்களின் ரகசிய கூட்டம் நடைபெற்ற கட்டடம் மீது, அமெரிக்க விமானங்கள் நேற்று நடத்திய குண்டுவீச்சில், அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதி உட்பட பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேற்காசிய நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில், பல பகுதிகளை கைப்பற்றி, எதிர்த்த ஏராளமானோரையும், சிறுபான்மை யின மக்களையும் கொன்று குவித்து வரும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம், அந்த இரு நாடுகளின் பல மாகாணங்கள் வீழ்ந்துள்ளன.

அங்கு, முறையான ஆட்சியிலிருந்த கவர்னர் கள் மற்றும் முதல்வர்களை கொன்று விட்டு அந்த பொறுப்பில், பயங்கரவாதி கள் தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதி நியமித்த பயங்கரவாதிகள் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்களில் பலர், ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள அன்பார் மாகாணத்தில், ரகசிய இடம் ஒன்றில் நேற்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கட்டடம் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசி, அந்த கட்டடத்தையே தகர்த்தது. இதில், பல மாகாணங்களின் கவர்னர்கள், பயங்கரவாதிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த கூட்டத்தில், அபுபக்கர் அல் - பாக்தாதி பங்கேற்றிருந்தால், அவன் படுகாயம் அடைந்திருக்க வேண்டும் அல்லது கொல்லப்பட்டிருக்க வேண்டும் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், அந்த கூட்டத்தில், அபுபக்கர் அல் - பாக்தாதி பங்கேற்றானா என்பது குறித்து, பயங்கரவாதிகள் தரப்பிலிருந்து தெளிவான தகவல் இல்லை. இந்த தாக்குதலில் அவன் இறந்திருந்தால், அது, அந்த பயங்கரவாதிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment