newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Friday 17 October 2014

விருதுநகரில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: 3 பேர் கைது


விருதுநகர் மாவட்டம் காரிச்சேரியில் , சீல் வைக்கப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரிச்சேரியில் ராமர் , முத்துராமன் ஆகியோருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை ஆகஸ்ட் மாதம் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆலையின் பின்புறம் கிடங்கு அமைத்து ராமர் , முத்துராமன் ஆகியோர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ராமர், முத்துராமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆயினும், இவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்ததாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment