newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Tuesday 21 October 2014

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி




அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

அரியலூர்

இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியில் இருந்தபோது வீர மரணம் அடைந்த தமிழ கத்தை சேர்ந்த போலீசார் உள்பட இந்தியா முழுவதும் 642 போலீஸ் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் நடை பெற்றது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் மறைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமை தாங்கி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோ, செல்லதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அரியலூர் ஸ்ரீதரன், ஜெயங்கொண்டம் வின் சென்ட், மாவட்ட குற்ற பிரிவு மற்றும் பதிவேடுகள் கணேசன், ஆயுதப்படை சங்கர நாராய ணன், அசோக் குமார் (பயிற்சி) ஊர்க்காவல் படை தளபதி ராஜன், ஆகி யோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினர். அதன் பின்பு ஆயுதப் படை போலீசார் அணி வகுப்பு செய்து குண்டுகள்முழங்க மரியாதை செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் பணியின்போது இறந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பெயர்களை வாசித்தார். அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச் சியின்போது அனைவரும் சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில், நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தலைமை தாங்கி ஆயுதப்படை வளா கத்தில் அமைக் கப்பட்டி ருந்த நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து உயிர்நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து குண்டுகள் முழங்க அணி வகுப்பு மரியாதை செலுத் தப்பட்டு உயிர்நீத்த வர்களுக் காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட தலைமை இட கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், மதுவிலக்கு அமல்பிரிவு துணை சூப்பி ரண்டு சந்திர சேகரன், துணை சூப்பிரண் டுகள் சந்தான பாண்டியன், சுருளி யாண்டி, கோவிந்த ராஜ், போலீஸ் இன்ஸ்பெக் டர்கள் கோபாலசந்திரன் (தனி பிரிவு), ஜாகிர் உசேன் (மாவட்ட ஆயுதப்படை), செந்தில்குமார், சிவசுப் ரமணியன், பிரகாஷ், ரவிசக் கரவர்த்தி, சிவராஜ் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment