அரியலூரில் ஆக்கிரமிப்பின் போது வீடுகளை இழந்த 21 பேருக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைப் பட்டாக் களை அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரியலூர் செந்துறை சாலையிலுள்ள நீர்நிலை புறம்போக்கில் இருசுகுட்டை யில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையிலான வருவாய் துறையினர் கடந்த 12-ந் தேதி பொக்ளின் எந்திரம் மூலம் அகற்றினர். இதில் வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.
இலவச வீட்டு மனைப்பட்டா
இதையடுத்து உதவி கலெக் டர் சந்திரசேகர் சாகமூரி 21 பேருக்கு மாற்று இடத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட் டாக்களை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் அரியலூர் தாசில் தார் வைத்தியநாதன், நேர்முக உதவியாளர் தண்ட பாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment