ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, தாம் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடையவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முக்கியமான வழக்கு என்பதால், தீர்ப்பு முழுவதையும் படித்த பிறகு கருத்து தெரிவிக்கலாம் என பொறுமையாக இருந்ததாக கூறியுள்ளார்.
அதேநேரத்தில், ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக தாம் மகிழ்ச்சி அடையவும் இல்லை என்றும் தற்போது அவர் நிபந்தனை ஜாமினில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் இல்லை எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment