newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 28 September 2014

பதவியை இழந்த அரசியல் தலைவர்கள்


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், ஏற்கனவே 5 பேர் பதவியை இழந்துள்ள நிலையில், தற்போது அப்பட்டியலில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ரஷீத் மசூத், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தனது பதவியை இழக்க நேரிட்டது. வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, அவரது அமைச்சரவையில், ரஷீத் மசூத், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, திரிபுரா மருத்துவக் கல்லூரியில், தகுதியில்லாத மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் ஒதுக்கீடு செய்தார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. மக்களவை பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், பதவி இழந்த முதல் இந்திய அரசியல்வாதியும் இவரே.


ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட இந்த தீர்ப்பின் காரணமாக லாலு பிரசாத், சரண் தொகுதியின் எம்.பி. பதவியை இழந்தார். இதே வழக்கில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷர்மாவும், 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால், ஜஹன்னாபாத் தொகுதியின் எம்.பி. பதவியை இழந்தார்.


இதேபோல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த பாபன்ராவ் கோலப், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட பாபன்ராவுக்கு தடைவிதித்தது.


தமிழகத்தில், திமுக-வைச் சேர்ந்த டி.எம்.செல்வகணபதி, சுடுகாட்டு ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழந்தார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு




18 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறையும், 10 கோடி ரூபாய் அபராதமும் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வழக்கின் 2வது, 3வது மற்றும் 4வது குற்றவாளிகளான, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு, இந்திய குற்றவியல் சட்டம் 120-பி பிரிவில், தலா 6 மாத சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.


முதல் படி




அனைவருக்கும் இனிய வணக்கம்.

அரியலூர் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வெளியிடப்படும். அதோடு மட்டுமல்லாமல், தமிழகம், இந்தியா, உலகம், அறிவியல், கல்விச்செய்திகள் போன்றவைப் பற்றியும் உடனுக்குடன் வெளியிடப்படும்.

அனைவருக்கும் இனிய என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.