newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 19 October 2014

ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி கடிதம்




அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து மத்திய மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

 பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் ஜெயலலிதா சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

 இந்த நிலையில், மத்திய மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

 உங்களது நிலைக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு எனது அனுதாபமும், ஆதரவும் உண்டு. உங்களது துயரத்தைக் குறைப்பதற்காக நான் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால், அதை மகிழ்ச்சியோடு செய்வேன்.

 உங்களது வாழ்க்கையில் பெரிய துயரங்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம், ஒழுக்கம், துணிவு ஆகியவற்றின் மூலம் நீங்கள் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள்.

 இந்தச் சோதனையான காலக்கட்டம் விரைவில் நீங்கி, நீங்கள் மீண்டும் மாநிலத்தின் நிர்வாகத் தலைமையை ஏற்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்காக பல சாதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களது உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். நாடு முழுவதும் உங்களது அபிமானிகள் நிறைய பேர் உள்ளனர் என்பதை நினைவில் வைத்திருங்கள் என அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment