அரியலூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அரியலூர் : 19.10.2014
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, கலெக்டர் சரவண வேல்ராஜ் பேசியதாவது: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிகளில் வெளியிடப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம், 4,72,689 வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் சட்டசபை தொகுதியின் மொத்த வாக்காளர்கள், 2,34,810. இதில், ஆண் வாக்காளர்கள், 1,17,304. பெண் வாக்காளர்கள், 1,17,506. ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 2,37,879. இதில், ஆண் வாக்காளர்கள், 1,18,826. பெண் வாக்காளர்கள், 1,19,053. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்கள், நவம்பர், 10ம் தேதி வரை, உதவி கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் அதற்கான படிவத்தை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம். வரும், 17 மற்றும், 30 தேதிகளில் இதற்கான சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அக்டோபர், 26 மற்றும் நவம்பர், 2ம் தேதிகளில், சம்பந்தப்பட்ட வாக்குசாவடி அமைவிடங்களில், சிறப்பு திருத்த முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, டி.ஆர்.ஓ., ரவீந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சடையப்ப விநாயகமூர்த்தி, தேர்தல் தாசில்தார் ராமன், அரியலூர் தாசில்தார் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment