newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Friday 26 December 2014

செந்துறை அருகே பெண் தற்கொலை - ஊராட்சி தலைவர் கைது

 செந்துறை: 26.12.2014

செந்துறை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.



தூக்கில் பெண் பிணம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வஞ்சினபுரத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது 29). இவருக்கும் அருகில் உள்ள ஆனந்தவாடியை சேர்ந்த ரஞ்சிதாவுக்கும்(19) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 13.6.2014 அன்று ரஞ்சிதா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து ரஞ்சிதாவின் தாய் தனக்கொடி மற்றும் உறவினர்கள் ரஞ்சிதாவின் மர்ம சாவு குறித்து செந்துறை போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார், ரஞ்சிதாவின் கணவர் வீரமணி மற்றும் வீரமணியின் தாயார் கருப்பாயி(43), தந்தை ராஜலிங்கம்(50), சகோதரர் ராஜ்குமார் (25) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். தனக்கொடி கொடுத்த புகாரில், தனது மகள் ரஞ்சிதாவின் சாவுக்கு காரணமானவர்களுக்கு வஞ்சினபுரம் ஊராட்சி தலைவர் தனபால் உடந்தையாக இருந்தார் என்றும், தனது மகளை சாதி பெயரை சொல்லி திட்டினார் என்றும் கூறியிருந்தார்.

ஊராட்சி தலைவர் கைது


இந்த புகார் தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் கருணாகரன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், கோட்டாட்சியர் கருணாகரன் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் பேரில் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் ஊராட்சி தலைவர் தனபாலை அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தார்.

No comments:

Post a Comment