newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Friday 17 October 2014

ஊழல் குற்றச்சாட்டு: சீன அதிகாரிக்கு கண்காணிப்புடன் கூடிய மரண தண்டனை


ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சீன ரயில்வேத் துறை மூத்த பொறியாளர் ஒருவருக்கு கண்காணிப்புடன் கூடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷங் ஷூகாங் என்ற அந்த அதிகாரி சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர் மீதான 13 குற்றச்சாட்டுகள் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கண்காணிப்புடன் கூடிய மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, அதில் நீதித்துறைக்குத் திருப்தி இல்லையெனில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். ஊழல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ரயில்வே அமைச்சர் லியூ ஜியூன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர்.

No comments:

Post a Comment