newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 25 October 2014

அரியலூர் ரெயில் நிலையம் அருகே இறந்து கிடந்தவர் யார்? போலீசார் விசாரணை



அரியலூர் அருகே கல்லக்குடி ரெயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத ஒரு  ஆண்  இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவருக்கு சுமார் 50 வயது இருக்கும்.  அவரது சட்டை பையில் 24–ந் தேதி கல்லக்குடியில் இருந்து அரியலூருக்கு வருவதற்கான ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment