newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 9 November 2014

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு: 21 பேர் புதிதாக சேர்ப்பு


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் 4 கேபினட் அமைச்சர்கள் உட்பட 21 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். சிவசேனாவைச் சேர்ந்த அனில் தேசாய் அமைச்சராவார் என கூறப்பட்ட நிலையில், அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றபின், இன்று முதன்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சிவசேனா கட்சியின் சுரேஷ் பிரபு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜே.பி.நட்டா, ஹரியானாவைச் சேர்ந்த பிரேந்தர் சிங் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக தெலங்கானாவைச் சேர்ந்த பண்டாரு தாத்தாரேயா, பாரதிய ஜனதா மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் ஷர்மா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பீகாரைச் சேர்ந்த ராம் கிரிபால் யாதவ், யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்த் சின்கா ஆகியோர் இணையமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர். இதேபோன்று தெலுங்குதேசம் கட்சி மாநிலங்களவை எம்.பி.யும் தொழிலதிபருமான ஒய்.எஸ்.சவுத்ரி, மேற்குவங்க பாடகர் பாபுல் சுப்ரியோ, பெண் துறவி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டோரும் மத்திய இணையமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி உட்பட 45 பேர் இடம்பெற்ற நிலையில், தற்போது புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அமைச்சரவை பலம், 66-ஆக உயர்ந்துள்ளது. 


No comments:

Post a Comment