அரியலூர் மாவட்டத்தில் போலி மதுபானம் விற்ற மளிகை கடைக்காரர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தில் போலி மது பானம் விற்கப் படுவதாக கலெக்டர் சரவண வேல்ராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவு படி பெரம்பலூர் மாவட்ட உதவி கலால் ஆணையர் சாரங்கபாணி, டாஸ்மாக் மண்டல மேலாளர் சத்தியன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், கோட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், கூடுதல் கலால் கண்காணிப்பாளர் செல்லதுரை மீன் சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
மளிகைக்கடை
அப்போது அதே ஊரை சேர்ந்த தவமணி (வயது 26), என்பவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்து தொழில் செய்து வருவதும், இவருடைய கடையில் போலி மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
பின்னர் கடை மற்றும் வீட்டை சோதனை செய்த போது தவமணியின் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
உடனடியாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து தவமணியையும் போலீசார் கைது செய்தனர்.
அரசு மதுபான பாட்டிலில் சீல் பிரிக்காமல் போலி மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 12 பேர் கைது
அரியலூர் மாவட்டத்தில் 16 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவிந்தராஜ், சுப்பிரமணியன், மணிகண்டன், செல்லதுரை, குணசேகரன், ராஜேந்திரன், ரங்கராஜ், தருமராஜ், கார்த்திகேயன், கோவிந்தராஜ், சிவா, ராஜேந்திரன் ஆகிய 12 பேரை அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக கைது செய்து அவர்களிடமிருந்து 56 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment