அரியலூர்
மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங் களை கலெக்டர்
சரவண வேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
கலெக்டர்
ஆய்வு
அரியலூர்
மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து
பயனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதில்
தேசிய தோட் டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் 2013–14ம் ஆண்டில் அரியலூர் வட்டாரத்தில் மேலக்கருப்பூர்
கிராமத்தில் அய்யனார் வயலில் நடவு செய்யப்பட்ட எலுமிச்சை வயலை அவர் ஆய்வு
செய்தார். மேலும் வாழை மரங்களையும்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு திட்டத் தின் பயன்களை அதிக
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என்று அவர்
அறிவுரை வழங்கினார்.
பின்னர், மேலக்கருப்பூர்
கிராமத்தில் செல்வம் என்ற விவசாயி மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதையும், பெரியநாகலூர்
கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வயலில் துவரை பயிரிட்டுள்ளதையும், அஸ்தினாபுரம்
கிராமத்தில் சுரேஷ் என்ற விவசாயி 1 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதையும், கருணா மூர்த்தி என்பவர்
அணுசரணை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் நெல் உற்பத்தி செய்துள்ளதையும் கலெக்டர்
நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
மிளகாய்–வெங்காயம் சாகுபடி
மேலும், தேசிய நுன்னீர் பாசன
திட்டத்தில் 2013–14ம் ஆண்டு அரியலூர் வட்டா ரத்தில் அருங்கால் கிராமத்
தில், முருகேசன்
என்ற விவசாயி வயலில் சொட்டு நீர்ப்பாசனத்தில் மிளகாய் மற்றும் வெங்காயம் சாகுபடி
செய் யப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வை யிட்ட
போது 1
ஏக்கர் நிலத்தில் ரூ.30 ஆயிரம் லாபம் பெறுவதாக விவசாயி முருகேசன் தெரி
வித்தார்.
மேலும், சொட்டுநீர் பாச னத்தில்
நிரந்தர பயிரான மா பயிரிட்டு அதில் ஊடு பயிராக பருத்தி பயிர் செய்துள்ள
சாமிநாதனின் விவசாய நிலத் தில் கலெக்டர் பார்வையிட்டபோது, தேசிய தோட்டக்கலை இயக்க
திட் டத்தின் மூலம் மா பயிரிட 1 ஹெக்டேருக்கு ரூ.9,900 மானியம் வழங் கப்பட்ட தாகவும், சொட்டு நீர் பாசனம்
அமைக்க 1 ஹெக்டே ருக்கு 75 சதவீதம் மானியமாக ரூ.73 ஆயிரத்து 816 வழங்கப் பட்டதாகவும் சாமிநாதன் தெரிவித்தார்.
பருத்தியில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்வதால் 1 ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் லாபம்
பெறுவதாகவும் தெரி வித்தார்.
இந்த
ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குனர் சுப்பையா, உதவி இயக்குனர்கள் மோகன், சரண்யா மற்றும் வேளாண்
அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment