அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண
வேல்ராஜ் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
ஊழல்தடுப்பு உறுதிமொழி
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட
அரங்கில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை யில் ஊழல் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதி
மொழி எடுக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில், “இந்திய
நாட்டின் பொதுப் பணியாளர் களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சார்ந்த எல்லா துறைகளிலும்
நேர்மையும், ஒளிவுமறைவற்ற தன்மையும் இடம்பெறுவதற்கு, தொடர்ந்து
அயராது பாடு படுவோம் என்று இதனால் உளமாற உறுதி கூறுவோம்”. “ஊழலை
அறவே ஒழித்திட நம் வாழ்வில் இடையறாது முயல்வோம் எனவும் உறுதி கூறுவோம்”. என்ற உறுதி
மொழியினை கலெக்டர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர் களும் உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்
அலுவலர்¢ ரவீந் திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முஸ்தபாகமால் பாட்ஷா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சடையப்ப விநாயக மூர்த்தி
உள்பட வருவாய்த் துறை மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment