newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Wednesday 10 December 2014

அரியலூரில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி

அரியலூர்:10.12.14


அரியலூரில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை  கலெக்டர் சரவணவேல்ராஜ்  தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

மனித உரிமைகள் உறுதிமொழி

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மனித உரிமைகள் தினத்தையொட்டி, அனைத்துத்துறை அலுவலர்கள் மனித உரிமைகள் நாள் உறுதி மொழியினை ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் சரவணவேல்ராஜ்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நான், இந்திய அரசமைப்பு சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு, செயல் படுத்தப்படுகின்ற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும், பாதுகாக்கப்படுகிற அனைத்து மனித உரிமைகளின்பால் உண்மையான மாறாத பற்றுறுதி மிக்கவனாக இருப்பேன். அந்த உரிமைகளை பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மற்றவர்களும் வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி ரவீந்திரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சடையப்ப விநாயகமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முஸ்தபா கமால் பாட்ஷா (பொது), செந்தில் குமரன் (வளர்ச்சி), சோமசுந்தரம் (கணக்குகள்), இணை இயக்குநர் (வேளாண்மை) குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, துணை இயக்குநர் (தோட்டக் கலை) சுப்பையா, அலுவலக மேலாளர்கள் குணசேகரன் (பொது), ஸ்ரீதரன் (குற்றவியல்) மற்றும் வருவாய்துறை, வளர்ச்சித் துறை, வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment