newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 27 December 2014

50 மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


ஜெயங்கொண்டம்: 27.12.2014

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 பேர் மாதந்தோறும் வழங்கி வந்த மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், தொடர்ந்து உதவி தொகை வழங்கக்கோரியும் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் திருமாறன் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு மாற்றுத்திறநாளிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment