ஜெயங்கொண்டம்: 27.12.2014
ஜெயங்கொண்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட
தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர்
கைது
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் வழிப்பறியில்
ஈடுபட்டதாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்
போலீசார் நேற்று அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக
சந்தேகப்படும் படியாக வந்த 3 பேரை பிடித்து
விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், கடலூர் மாவட்டம் மோவூர் பகுதியை சேர்ந்த கோமேத கண்ணன் (வயது 26),
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த
மைக்கேல்ராஜ் (42), திருபுவனம் பகுதியை சேர்ந்த கார்த்திக்
(28) என்பதும், அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார்
வழக்குப்பதிவு செய்து கோமேத கண்ணன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜெயங்கொண்டம் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ள மைக்கேல்ராஜ் பாபநாசம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக உள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment