newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 28 September 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு




18 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறையும், 10 கோடி ரூபாய் அபராதமும் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வழக்கின் 2வது, 3வது மற்றும் 4வது குற்றவாளிகளான, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு, இந்திய குற்றவியல் சட்டம் 120-பி பிரிவில், தலா 6 மாத சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment